கல்லூரிகளில் ஸிப்ட் முறை ரத்து

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை, மாலை என இரு சுழற்சி
முறைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளருக்கு கல்லூரி கல்வி இயக்ககம் கடிதம் மூலம்
தெரிவித்துள்ளது. 

மேலும், கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கிய
ரூ.150 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இனிமேல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2ஸிப்ட்களில் நடைபெற்ற வகுப்புகள் இனிமேல் ஒரே ஸிப்ட்-ஆக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments